×

5 கிராம மின்நுகர்வோர்கள் புத்தனாம்பட்டி துணைமின் நிலையத்தில் மின்தடை புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

திருச்சி, நவ.30: புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் தேனூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் மின்தடை புகார்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரங்கம் மின்வாரிய கோட்டத்தில் சமயபுரம் துணை மின் நிலையத்திலிருந்து தற்போது 22 கி.வோ தேனூர் மின் பாதை மூலம் தேனூர் மின்மாற்றிகள் 17, எதுமலை மின்மாற்றிகள் 19, பாலையூர் மின்மாற்றிகள் 7, வலையூர் மின்மாற்றிகள் 9, பெரகம்பி மின்மாற்றிகள் 20 என 5 கிராமங்களை சேர்ந்த 72 மின்மாற்றிகள் மின்னோட்டம் பெறுகின்றன.குறைந்த மின் அழுத்தக் குறைபாட்டை போக்கும் வகையில் நவம்பர் 30ம்தேதி (இன்று) முதல் புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட 22 கி.வோ எதுமலை மின்பாதை மூலம் மின்னோட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து விட்டதால், இந்த கிராமங்களிலுள்ள மின்நுகர்வோர் மின் தடை சம்பந்தப்பட்ட புகார்களை புத்தனாம்பட்டி துணைமின் நிலையத்துக்கு 04327-234820 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற் பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags : Electricians ,Buddhistampatti Subsidiary ,
× RELATED கார் டயர் வெடித்து விபத்து திருச்சியை...