×

செம்பனார்கோவில் அருகே வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

செம்பனார்கோவில்,நவ.30: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வடகரையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. வங்கி வாயிலில் ஏடிஎம் மையம் உள்ளது. கிராமப்புற பகுதியான இப்பகுதியில் அதிக அளவில் கூட்டம் இல்லாமல் இருக்கும் இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் இயந்திரம் அருகே சிசிடிவி கேமராக்கள் உடைந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடன் வங்கி ஊழியர்கள் வந்து பார்த்தபோது சிசிடி கேமராவை உடைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் மர்ம நபர் சென்றது தெரியவந்தது. இது குறித்து வங்கி கிளை மேலாளர் உதயகுமார் செம்பனார்கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமப்புற பகுதியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ATM ,Sembanarko ,
× RELATED ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37...