×

கரூர் புறநகர் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

கரூர், நவ. 30: கரூர் நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், வேலுசாமிபுரம் போன்ற பகுதிகள் புறநகர் பகுதிகளாக உள்ளன. இதில் பெரும்பாலான உட்புற சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கரூர் நகரப்பகுதிகளை ஒட்டியுள்ள பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், புறநகர்ப்பகுதி சாலை கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளதாக கூறப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் இது குறித்து குறைகள் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.

ஆனால் அமைப்பு இல்லாத நிலையில் நகராட்சி அதிகாரிகளிடம் தான் புகார் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. சாலை மோசம் குறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு மழை காரணமாக, பழுதடைந்துள்ள உட்புறச் சாலைகளை செப்பனிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : roads ,suburb ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்