×

மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும் அர.சக்கரபாணி எம்எல்ஏ பேச்சு

குஜிலியம்பாறை, நவ. 30:  மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்பட்டு திமுக ஆட்சி அமைக்கும் என அர.சக்கரபாணி எம்எல்ஏ பேசினார்.  குஜிலியம்பாறையில் திமுக அமைப்பு தேர்தல் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகிக்க, பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அர.சக்கரபாணி எம்எல்ஏ திமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கி பேசுகையில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தற்போது நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

இதில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜீவா, ராஜாமணி, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்பாஸ், நிர்வாகிகள் மாரிமுத்து, கிருஷ்ணன், மணிமாறன், தாமரைக்கண்ணன், செல்வநாராயணன், மஞ்சுளா, பொன்சுப்பிரமணி, சௌந்தர்மாரியப்பன், செல்வராஜ், பாலசுப்பிரமணி, அண்ணாத்துரை, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  செம்பட்டி: கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி காமலாபுரத்தில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கரிகாலப்பாண்டியன் தலைமை வகிக்க, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.விழாவில் திமுக இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோருக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags : speech ,Chakrabani MLA ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...