×

பரமத்திவேலூர் அருகே பள்ளியில் கொள்ளையடித்த வாலிபர்கள் இருவர் கைது

பரமத்திவேலூர், நவ.30:  பரமத்திவேலூர் அருகே பிள்ளைக்களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், 1.20 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பிள்ளைக்களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் அலுவலகப் பூட்டை உடைத்து அங்கிருந்த 1.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கொடுத்த புகாரின் பேரில், பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பரமத்தி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வராஜ்(24), சின்னசாமி மகன் விஜி என்கிற விஜயன்(23) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் பரமத்தி அருகே உள்ள தனியார் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர்.

Tags : men ,school ,Paramadivelur ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...