திருவிடைமருதூர், நவ.30: திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றில் 500 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக காரில் கடத்தி வரப்பட்ட 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, காரில் வந்த காரைக்கால் நிரேவியை சேர்ந்த அன்பு (40), கொல்லுமாங்குடியை சேர்நத செந்தில்குமார் (40) காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த ஜெயக்குமார் (41) ஆகிய 3 பேரையும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.