×

தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்

திருக்கழுக்குன்றம், நவ. 30: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் 7 வகையான பதிவேடுகள், வேலை தொடர்பான கோப்புகள் ஆகியவற்றினை பராமரிப்பதுடன் இந்த ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் பரிசீலனைக்கு உட்படுத்துவதை உறுதி செய்தல், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பிரதி மாதம் குறிப்பிட்ட தினத்தில் வேலை வாய்ப்பு தின நிகழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும், பணித்தளத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 45 பணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Training camp ,coordinators ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்