×

ஐஓசிஎல் சேமிப்பு கிடங்கில் தீ தடுப்பு ஒத்திகை

சங்ககிரி, நவ.29: சங்ககிரி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில், தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஒத்திகை நடந்தது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நாரப்பன்சாவடியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செயல் படுவது குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது. ஓத்திகை நிகழ்ச்சிக்கு கிடங்கின் முதன்மை மேலாளர் பரத்குமார் தலைமை தாங்கினார். தீடீரென தீ விபத்து ஏற்பட்டால் அலுவலர்களும், பணியாளர்களும் எவ்வாறு செயல்பட்டு தீயை கட்டுபடுத்தி தீயணைப்பு கருவிகளை கொண்டு அணைப்பது, தீயை பரவவிடாமல் தடுப்பது என்பது பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழச்சியை தொழிலாளர் பாதுகாப்பு இணை இயக்குனர் பார்வையிட்டார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராஜன், கோவிந்தராஜ், கணேசன் இந்தியா சிமெண்ட், சேசாயி நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் விசாகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : storage warehouse ,IOCL ,
× RELATED வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை ரூ.2.50 குறைப்பு