×

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

நாமக்கல், நவ.29: நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் மற்றும் தேவராயபுரத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த போட்டி அமைப்பாளர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் காளை உரிமையாளர்கள், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பொங்கல் பண்டிகையின் போது தொன்றுதொட்டு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நல்ல நிலையில் செய்யப்பட்டிருந்தது. எனவே, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது, வரும் ஜனவரி  17ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

Tags : collector ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...