×

புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள்

நாமக்கல், நவ.29: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுச்சத்திரம் வட்டாரம் ராமநாயக்கன்பட்டி கிராமத்தில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயி ஜெயக்குமார் வயலில் அமைத்திருந்த, குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பட்டணத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், வயலில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர பந்தல் அமைப்பை ஆய்வு செய்தார். மேலும், வயலில் சாகுபடி செய்துள்ள திராட்சை வயலையும் பார்வையிட்டார். முத்துக்காளிப்பட்டியில் சொட்டுநீர் பாசனம் திட்டத்தில், வெங்காய பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைத்திருந்த விவசாயி அத்தியப்பன் வயலை ஆய்வு செய்து, சொட்டுநீர் பாசனத் திட்டத்தினால் அடைந்த பலன்களை கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன், உதவி இயக்குனர்கள் மஞ்சுளா, மணி, யோகநாயகி, தோட்டக்கலை அலுவலர் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : New Birthplace ,
× RELATED புதுச்சத்திரம் வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்