×

வேலம்பட்டியில் அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை பொருத்த வலியுறுத்தல்

போச்சம்பள்ளி, நவ.29: வேலம்பட்டியில், 2 ஆண்டுக்கு முன் அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போச்சம்பள்ளிைய அடுத்து உள்ளது வேலம்பட்டியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர் ஆகிய வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேலம்பட்டி வழியாக வந்து செல்ல வேண்டும். இதே வழியில் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கொல்லாபுரியம்மன் கோயில் உள்ளதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதையடுத்து, 4 வழிச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டது. இதனால், இவ்வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்து அபாயம் மற்றும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால் அச்சமடைந்துள்ளனர். எனவே, உடனடியாக உயர்கோபுர மின்விளக்கை பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : erosion ,
× RELATED உரிமம் புதுப்பிக்க...