சாத்தூர், நவ. 29: சாத்தூரில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஊழியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட தலைவர் அரசன் ஜி.வி. கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எல்.பி.எல்.கே பாண்டியன், நகர துணைத்தலைவர் ஜோதிநிவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கும்கி கார்த்திக், மேற்கு வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் நகர செயலாளர் கணேஷ் பாபு, பொருளாளர் சதீஸ்குமார், மாணவரணி தலைவர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரை தர்மர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சாத்தூர் நகர தலைவர் அய்யப்பன் செய்திருந்தார். கூட்டம் முடிந்ததும் விருதுநகர் தெற்குமாவட்ட தலைவர் அரசன் ஜி.வி.கார்த்திக், நகர தலைவர் அய்யப்பன் மற்றும் கட்சிநிர்வாகிகள் தொண்டர்கள் சாத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்று மெயின் ரோட்டை சீரமைக்க கோரி மனு கொடுத்தனர்.