×

பண்ணையில் இருந்த பன்றிக்குட்டிகள் மாயம்

காரைக்குடி, நவ.29: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி பாலாஜி நகரை சேர்ந்தவர் ரங்கபஞ்சநாதன்(27). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 10 வெள்ளை பன்றி குட்டிகளையும், நான்கு கருப்பு பன்றி குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். தினமும் காலை, மாலை உணவு கொடுத்து விட்டு சென்றவர் நேற்று முன்தினம் காலை தனது பண்ணையில் சென்று பார்த்தபோது பன்றிக் குட்டிகள் அனைத்தும் திருடு போயுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ரங்க பஞ்சநாதன் புகார் அளித்தார். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்றிக்குட்டிகளைத் தேடி வருகின்றனர்.

Tags : piglets ,farm ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி