×

குளத்தூர் அருகே குடிநீர் குழாய் பகுதியில் ஆபத்தான மின்கம்பம்

குளத்தூர்,நவ.28: குளத்தூர் அருகே குடிநீர் குழாய் பகுதியில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தூர் அருகே உள்ள தெற்கு பனையூர் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் பகுதியில் உள்ள மின்கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்கிரிட் உடைந்து சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அதன் அருகிலேயே பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் குடிநீர் குழாயும் உள்ளது.

இதனால் ஆபத்தான மின்கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சம் அப்பகுதியினரிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி சிறு குழந்தைகளும் மாலை நேரங்களில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருப்பதால் மின்கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் அமைக்க அப்பகுதியினர் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மேலும் இந்த அபாயநிலை மின்கம்பத்தால் ஏதேனும் பெரிதாக விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drinking tube area ,Kuttur ,
× RELATED கூத்தூர் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி