×

தனிப்பட்டா மாற்றித்தர ரூ.6 ஆயிரம் லஞ்சம் உடன்குடி சர்வேயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி, நவ. 28:தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து பகுதியை சேர்ந்தவர்கள் ஐயப்பன், அமல் அந்தோணி அம்புரோஸ் ப்ரிமேன். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு மானாடு தண்டுபத்து பகுதியில் 6 சென்ட் நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்தின் கூட்டுப்பட்டாவில் இருந்து தங்களுக்கு தனிப்பட்டா வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர். தனிப்பட்டாவாக மாற்றித்தருவதற்கு அப்போதைய உடன்குடி பிர்கா துணை சர்வேயராக இருந்த வரதராஜன் என்பவர் ஐயப்பன், அமல் அந்தோணி இருவரிடமும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார்.

 இதுகுறித்து அவர்கள் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தனர். பின்னர் அவர்களது ஆலோசனையின் பேரில் சர்வேயர் வரதராஜனிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திருச்செந்தூரில் கையும் களவுமாக சர்வேயர் வரதராஜனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து, லஞ்சம் வாங்கிய சர்வேயர் வரதராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags :
× RELATED தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும்...