×

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், நவ.28:  சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், உலக வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பெருமா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தளவாய்பட்டி ராஜலட்சுமி, சிட்லிங் சவுமியா, சாதிய ஆணவ படுகொலையான ஓசூர் நந்தீஸ்-சுவாதி ஆகியோரின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறாதவாறு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், நிவாரண நிதியுதவியும் வழங்கிட வேண்டும். பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி பெண்கள் பாதுகாப்பு குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன. மாநில தலைவர் வாலண்டியா, ஞானசவுந்திரி, ராஜாத்தி, சந்திரா, சுமதி, இந்திராணி, சுதா, செல்வி, பிந்துஜா, தனலட்சுமி, கோகிலா, வனிதா, சரோஜா  அமுதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Democracy Mathers Association ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்