×

திருத்துறைப்பூண்டி அருகே புயல் பாதித்து 12 நாட்களாகியும் மின்சாரமின்றி இரவில் மக்கள் பரிதவிப்பு உடனடியாக குடிநீர், மண்ணெண்ணெய் வழங்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, நவ. 28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குரும்பல் குன்னூர் பகுதியில் அத்தியாவசியமான குடிநீர், மண்ணெண்ணெய் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் 12 நாட்களாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் மற்றும் மண்ணெண்ணெய்வழங்கிட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .இதுகுறித்து குரும்பல் முன்னாள்ஊராட்சி மன்றதலைவர் பிரேமா கூறுகையில், குரும்பல் பகுதிக்கு தொண்டு நிறுவனங்கள்மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள் கொஞ்சம் ஏற்கனவே வந்துள்ளது.இன்றுகூட (நேற்று) தனியார் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. முக்கியமாக கூடுதலாக அரிசி மற்றும் வீடுகளை தற்காலிகமாகமூடுவதற்கு தார்பாய்கள்வழங்கிட வேண்டும் என்றார். குன்னூர் செல்வம் கூறுகையில், குன்னூரில் 850 குடும்பங்கள்உள்ளன. தனியார் தொண்டு நிறுவனங்கள்மூலம் ஏற்கனவேநிவாரணப் பொருட்கள் கொடுத்துள்ளனர்.அதில் கொடுத்த மெழுகுவர்த்தியை வைத்துதான் இரவு நேரங்களில் வசித்து வருகிறோம்.குடிநீர் ஜெனேரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி வழங்கப்படும் குடிநீர் குடிக்க முடியவில்லை.

எனவே டேங்கர் லாரிமூலம் குடிநீர் வழங்கிட வேண்டும்.மண்ணெண்ணெய் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் முதற்கட்டமாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்வழங்கிட வேண்டும். கடந்தஇரண்டு தினங்களாக சமைப்பதற்கு அரிசி வழங்கப்படவில்லை. அரிசியும் வழங்கிட வேண்டும் என்றார். குன்னூர் ராஜேஸ்வரி கூறுகையில் தொண்டு நிறுவனம் மூலம் கொஞ்சம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தமாதம் ரேஷன் கடையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயும் வழங்காததால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். அரசு அறிவித்த 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய்இன்னமும் வழங்கப்படவில்லை. உடனடியாகஇந்தபகுதிக்கு குடிநீர் மற்றும் மண்ணெண்ணெய்வழங்கிட வேண்டும் என்றார்.

Tags : storm ,Thiruthuraipondi ,
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...