×

வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

முத்துப்பேட்டை, நவ.28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர்வடகாடு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட பாரதி முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செழியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த பாம்பை  பிடித்தனர். பாம்பு சுமார் 5அடி நீளம் இருந்தது. பின்னர்  அந்த பாம்பை முத்துப்பேட்டை வனப்பகுதியில் விட்டனர்.

Tags : snake firemen ,house ,forest ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி