×

கால்வாய் பணிக்காக திடீர் பள்ளம் தண்டையார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட் எண்ணூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு மாதக் கணக்கில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று காலை எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, சுந்தரம்பிள்ளை நகர் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால், காரணமாக சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் சுற்றி சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் கடும் அவதியடைந்தனர். மேலும், கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே தனியார் பள்ளி உள்ளது. இவ்வழியாகதான், தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செல்ல வேண்டும். இதனால் ரயிலில் வேலைக்கு, கல்லூரி, வியாபாரத்துக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். இப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...