நாமக்கல், நவ.27: நாமக்கல்லில் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.நாமக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், நேற்று அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கலைச்செல்வன், செயலாளர் மாதேஷ் ஆகியோர் தலைமையில் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆசிரியர்களை, எஸ்ஐ ராமதாஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் அளிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அதை பறிக்கும் வகையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.