×

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டம்

தேன்கனிக்கோட்டை, நவ.27: தேன்கனிக்கோட்டையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்  நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பறித்த அரசாணை நகல் எரிப்பு போராட்டம்  நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். வட்டார செயலாளர் கோபால்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். வட்ட பொருளாளர் விஜயகுமார் வாழ்த்தி பேசினார். போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.தொடர்ந்து மத்திய அரசுக்கு  இணையாக ஊதுியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் இல்லை யெனில் போராட்டத்தை மேலும் தீவிரபடுத்துவோம் என்றனர். ஜெயசீலன் நன்றி கூறினார்.

Tags : Teacher ,Coalition ,government ,
× RELATED உதவி பேராசிரியர்...