×

மோடி அரசின் ஊழல்கள் துண்டுபிரசுரம் வழங்கிய காங்கிரசார்

உசிலம்பட்டி, நவ.27: மோடி அரசின் ஊழல்கள் என்ற துண்டு பிரசுரத்தை உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் தேர்தல் வளர்ச்சி நிதி கூட்டம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் வெஸ்டன்முருகன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வினோத்கண்ணன், நகரத்தலைவர் சசிவர்ணத்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகின்ற பாராளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் வளர்ச்சிக்கான நிதியை திரட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

 கூட்டத்தில் இளங்கோவன், தீபாபாண்டி, மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், சேடபட்டி வட்டார தலைவர் புதுராஜா, செல்லம்பட்டி வட்டார தலைவர் நன்மாறன், பிச்சை, ரெங்கமலை, தசரதபாண்டியன், தவம், சிங்கம், அர்ச்சுணன், லட்சுமணன், ஜெயகணேசன், முத்துமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர், மோடி அரசின் ஊழல்கள் என்ற துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர்.
கண்மாய்கள் நிரம்புமா?

சாத்தியாறு அணையின் பாசன பகுதியில் உள்ள 10 கண்மாய்களுக்கும் தலா 2 நாட்கள் வீதம் மட்டுமே தண்ணீர் கொடுக்கமுடியும் சூழ்நிலை உள்ளது. இந்த தண்ணீர் அந்தந்த கண்மாய்களுக்கு முழுமையாக சென்று விவசாய தேவையை பூர்த்தி செய்யுமா என்று விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வறண்டு கிடக்கும் கண்மாய்கள் முழுமையாக நிரம்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : Congressman ,government ,Modi ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...