×

கோபி அருகே இரும்பு கடை உரிமையாளரிடம் செயின் பறிப்பு

கோபி, நவ. 27:கோபி அருகே உள்ள அளுக்குளியில் இரும்புக்கடை உரிமையாளரிடம் பைக்கில் வந்த மர்மநபர் நகையை பறித்து சென்றார்.
  கோபி அருகே உள்ள அளுக்குளியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மனைவி ஜெயசீலி (59). இவரது மகன் குமார். இவர் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை கடையில் இருந்த ஜெயசீலி, பொருட்களின் தரம் பிரித்துக்கொண்டிருந்தார்.அப்போது கோபிபாளையம் சாலையில் இருந்து முகத்தில் துணியை கட்டிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர் ஜெயசீலியின் பின்பக்கமாக சென்று அவரது கழுத்தை இறுக்கி பிடித்துக்கொண்டு, அவர் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Tags : store owner ,Kobe ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்