நீடாமங்கலம்,நவ.27: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்,மன்னார்குடி பகுதிகளில் கடந்த குறுவை பருவத்தில் அறுவடை செய்த சன்னரக நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மற்றும் அசேசம்,மூவாநல்லூர்,தெற்கு நத்தம்,இடையர்நத்தம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்களிலிருந்து 75 லாரிகளில் 945 டன் சன்னரக நெல் மூட்டைகள் நேற்று நீடாமங்கலம் கொண்டு வந்து 21 வேகன்களில்(ரயில்பெட்டி) தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு தர்மபுரி மண்டலத்திற்கு அனுப்பி வைத்தனர்.