×

பூப்பந்தாட்ட போட்டிக்கு அணி தேர்வு

அரியலூர்,நவ.27: சீனியர் மாநில பூப்பந்தாட்ட பட்டய போட்டிகள் டிச. 29, 30 ஆகிய இரு தினங்கள் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசுமேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் அரியலூர்  மாவட்டத்தின் சார்பில் விளையாட விரும்பும்  வீரர்,வீராங்கனைகள் தேர்வு டிச. 9  அன்று காலை  அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள பூப்பந்தாட்ட விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர் வீராங்கனைகள் குழுக்களாகவோ அல்லது தனிநபராகவோ கலந்துகொள்ளலாம். இந்த அணி தேர்வில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பதிவு செய்துள்ள அணிகளின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொள்ளுமாறு அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் தெரிவித்துள்ளது.

Tags : match ,
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...