×

மனைவிக்கு சீமந்தம் முடிந்த மகிழ்ச்சியில் சாலையில் படுத்தபடி போன் பேசிய வாலிபர் மீது ஆட்டோ ஏறியதில் பலி

ஆம்பூர், நவ.27: மனைவிக்கு சீமந்தம் முடிந்த மகிழ்ச்சியில் சாலையில் படுத்தபடி போன் பேசிய வாலிபர் மீது ஆட்டோ ஏறியதால் அவர் பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சைனா(26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அர்ச்சனா(22) தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது மாமியார் வீடான கென்னடிகுப்பத்தில் சீமந்த விழா நடந்தது. பின்னர், சைனா தனது நண்பர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் மது விருந்து ெகாடுத்து இவரும் குடித்துள்ளார்.

இதையடுத்து, குடிபோதையில் இருந்த சைனா, தள்ளாடியபடி அருகில் இருந்த நாச்சார்குப்பம் சாலையில் படுத்துக்கொண்டு போனில் பேசினாராம். அப்போது, அவ்வழியாக கென்னடிகுப்பம் நோக்கி வந்த ஆட்டோ சாலையில் படுத்திருந்த சைனா மீது ஏறி இறங்கியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சைனா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டிய விண்ணமங்கலத்தை சேர்ந்த சங்கர்(30) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி மனைவிக்கு சீமந்தம் நடத்திய சில மணி நேரத்தில் கணவன் பலியான சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : cousin ,road ,
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...