×

காரியாபட்டியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

காரியாபட்டி, நவ. 23: காரியாபட்டியில் பேரூராட்சி 2வது வார்டு பகுதியில் நெடுங்குளம் செல்லும் சாலை, பேரூராட்சி திருமண மஹால் பின்புறம், குளியல் தொட்டி ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் மத்திய அரசு நேரு யுவகேந்திரா அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் சாலையில் மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டது.

மரக்கன்றுகளை வைத்து வேலி அமைத்தனர். குளியல் தொட்டி சுத்தம் செய்தல், விஷச் செடிகள் ஆகியவை இளைஞர் மன்றத்தின் சார்பாக அகற்றப்பட்டது. அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் செயலாளர் அருண்குமார் மற்றும் இளைஞர் மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : cleaning work ,Kariapatti ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...