×

கஜா புயல் பாதிப்பு போடியில் வீடு இடிந்து விழுந்தது 3 பேர் உயிர் தப்பினர்

போடி, நவ. 23: கஜா புயல் பாதிப்பால் போடியில் மேலும் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.கடந்த 16ம் தேதி உருவான கஜா புயலால் போடியில் விவசாயம் பெருமளவு பாதித்தது. சோளம், மக்காச்சோளம், காப்பி, தென்னை, வாழை விவசாயம் பாதிக்கப்பட்டது. போடி கொட்டகுடியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றைக் கடந்து சென்று விவசாயத்தை பார்க்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.தற்போது வெள்ளம் குறைந்திருப்பதால் ஆற்கைக் கடந்து விவசாய நிலங்களுக்குச் சென்ற விவசாயிகள், கஜாவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தாசில்தார் அலுவலகத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் போடியில் 29வது வார்டு லட்சுமி வர்கீஸ் என்பவர் வீடு சுவர் இடிந்தது. இதில் டூவீலர் புதைந்தது. சுவர் இடிந்து சாலை பகுதியில் விழுந்தால் வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த பாஸ்கரன் உயிர் தப்பினார். நேற்று போடி கீழராஜவீதி குருக்கள் ஐயர் தெருவில் பாண்டியன், அவரது மனைவி சுமதி, தாயார் காளியம்மாள் ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். புயல் மழையால் நனைந்து ஊறி போயிருந்த சுவர் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது இன்னொரு அறையில் 3 பேரும் உறங்கி கொண்டிகுந்ததால் காயமின்றி உயிர் தப்பினர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் டிவி, கட்டில், பலசரக்கு பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. வருவாய் ஆய்வாளர் ராமர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் இந்த வீட்டை பார்வையிட்டனர்.

Tags : house ,storm ,Ghazan ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி