×

மாநில போட்டிகளில் பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

பட்டிவீரன்பட்டி, நவ. 23:  கரூரில், திண்டுக்கல், தஞ்சை, சென்னை, கரூர் உள்ளிட்ட 16 மண்டலங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நடந்தன. இதில் திண்டுக்கல் மண்டலம் சார்பில் இறகு பந்து, டேபிள்டென்னிஸ் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ரிஷிகேசன், அரிஹரசுதன் ஆகியோர் இரட்டையர் இறகுபந்து போட்டியில் பங்கேற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்தனர்.

இதேபோல் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பழனிகுமார், பொம்மியப்பன் ஆகியோர் மாநில அளவில் நடந்த டேபிள்டென்னிஸ் போட்டியில் 2ம் இடம் பிடித்தனர். மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களையும் இந்துநாடர்கள் உறவின்முறை சங்க தலைவர் ராஜாராம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சங்க செயலர் சங்கரலிங்கம், துணைத்தலைவர் காமராஜ், என்எஸ்விவி பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் மோகன்அருணாச்சலம், செயலர்கள் பிரசன்னா, அய்யனார்வெங்கடேஷ், முதல்வர்கள் ஆத்தியப்பன், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pattiviranpatti ,school students ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு