×

திசையன்விளை, சங்கரன்கோவிலில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, நவ. 23:  நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அப்புவிளை விஎஸ்ஆர் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் விஎஸ்ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி தொகுத்து வழங்கினார். தேர்தல் பணி செயலாளர் குத்தாலம் கல்யாணம், தீர்மானக்குழு துணை செயலாளர் தேனி ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் அப்பாவு, பொருளாளர் ஞானதிரவியம், துணை செயலாளர் சித்திக், பேரூர் செயலாளர்கள் டிம்பர் செல்வராஜ், சேதுராமலிங்கம், தமிழ்வாணன் பேசினர். கூட்டத்தில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் எரிக்ஜூடு, ராமச்சந்திரன், ஆரோக்கிய எட்வின், துணை அமைப்பாளர்கள் நாகமணி, தனபால், க.புதூர் சுரேஷ்குமார், ஆனந்த், முத்துராமன், சமூகைமுரளி, ஜோசப் சந்திரன், ஜான்ரபீந்தர், முருகன், மாணிக்கம், ஜெயக்குமார், அசோக்குமார், மூர்த்தி, குமார், ராஜா, சுப்பையா, விஜயன், செந்தில்குமார், முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், ரமேஷ், பனிபாஸ்கர், பெட்டைக்குளம் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தர அயராது பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் முத்துபாண்டி, பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, சேர்மத்துரை, பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பொறியாளர் அணி சங்கர், இளைஞரணி ராஜதுரை, மாவட்ட துணை செயலாளர் பேபி ரஜப் பாத்திமா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கரன் வரவேற்றார். நாடாளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் குழந்தை தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேர்தலையொட்டி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தின்போது கலைஞர் அகாடமி சார்பில் சங்கரன்கோவில் தாய் தமிழ் பள்ளி நூலகத்திற்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில் நகர அவை தலைவர் பலவேசம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், இளைஞரணி பிரகாஷ், அண்ணாவியப்பன், வக்கீல்கள் முத்துராமலிங்கம், கண்ணன், சந்தனப்பாண்டியன், ஜெயக்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜா, குமார்சங்கர், பிரபாகரன், சுப்பையா, சுரேஷ், டைட்டஸ்ஆதித்தன், முனியசாமி, சோமசெல்வபாண்டியன், விவசாய தொழிலாளரணி அஜய் மகேஷ்குமார், ராமர், இளைஞரணி சரவணன், கலைஞர் அகாடமி ஒருங்கினைப்பாளர் வெங்கடேஷ், கார்த்திக், பத்மநாதன், பெரியதுரை, உதயகுமார், மாரியப்பன், வெள்ளத்துரை, தங்கவேல், முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,executives consultation meeting ,kovil ,Sankaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி