×

கழுகுமலை நடுஊரணி சித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம்

கழுகுமலை, நவ 23: கழுகுமலை நடுஊரணி சித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம் நடந்தது. கழுகுமலையில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஆறுமுக நகர் நடுஊரணி சித்தி விநாயகர் கோயிலில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து 5ம் ஆண்டாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் எம்பி தொகுதி பொறுப்பாளரும், திமுக  விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளருமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, நடுவப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சுப்பையா பாண்டியன், வக்கீல் பாலமுருகன், சிவா, அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநில துணைச்செயலாளர் ரகு  முன்னிலை வகித்தனர்.

 இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ்கண்ணன், அன்னதானத்தைத் துவக்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் அசோக்குமார், பொதுச்செயலாளர் பெருமாள்ஜி, உயர்நிலைக்குழு பொறுப்பாளர் முத்துப்பாண்டி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார். வக்கீல் ஆனந்தி, சமுத்திரப்பாண்டியன், பில்டிங் காண்ட்ரக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சர்வதேச உரிமைகள் கழக மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் காளிராஜ் பாண்டியன்,  14வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி காளிராஜ்பாண்டியன்  செய்திருந்தனர்.

Tags : Annadhanam ,
× RELATED ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை...