×

அரசு நந்தனார் பள்ளியில் மாவட்ட அலுவலர் ஆய்வு

சிதம்பரம், நவ. 23: சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த பள்ளிகளில் உள்ள பழைய சேதமடைந்த கட்டிடங்களை அகற்றுவது குறித்தும், புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் தாட்கோ செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசித்தார். பின்னர் மாணவர்கள் விடுதி, அவர்கள் உணவு உண்ணும் அறை, சமையலறை ஆகியவற்றை நல அலுவலர் ராஜ பார்வையிட்டார். ஆய்வின் போது பள்ளி தலைமையாசிரியர் குகநாதன், விடுதி முதன்மை காப்பாளர் குகநாதன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். அப்போது ஆண்கள் பள்ளியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், இரவு நேரங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க இரவு காவலர் நியமிக்க வேண்டியும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர்
பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Nandanar School ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்