×

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மழையிலும் அகல் விளக்கு விற்பனை களைகட்டியது ₹2 முதல் ₹250 வரை விற்பனை

வேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி மழையிலும் அகல்விளக்கு விற்பனை களைகட்டியது. ₹2 முதல் ₹2.50 வரையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் அண்ணாமலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

அதேபோல் கார்த்திகை திருநாளான இன்று கோயில்கள், வீடுகள் என்று அகல்விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இதனையொட்டி வேலூர் மாவட்டத்தில் அகல்விளக்குகள் விற்பனை களைகட்டியது. வேலூர் மண்டிவீதியில் அகல் விளக்குகள் ₹2 முதல் ₹250 வரையில் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையிலும் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்து அகல்விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

Tags : Kuala Lighthouse ,lamp selling ,
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...