×

பள்ளிகள், முகாம் இயங்கும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர், நவ.22: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நிவாரண முகாம்கள் இயங்கி வரும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் நிர்மல்ராஜ்  அறிவித்துள்ளார். கஜா புயலானது கடந்த 15ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  அன்று நள்ளிரவில் புயல் கரையை கடந்த நிலையில் இந்த புயலுக்கு திருவாரூர் மாவட்டத்தில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால்  16 மற்றும் 17 தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்நிலையில் 18ம் தேதி ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் 19, 20 மற்றும் 21 தேதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் 6வது நாளாக  பள்ளிகளுக்கு மாவட்டம் முழுவதும் விடுமுறை அளித்து கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரண முகாம்கள் இயங்கும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும்  கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : schools ,camping colleges ,
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு