கும்பகோணம், நவ. 22: உலக கழிப்பறை தினத்தையொட்டி கும்பகோணம் அடுத்த அன்னலக்ரஹாரம் ஊராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி தலைமை வகித்தார். இதில் கழிவறை பயன்படுத்துவதன் அவசியம், திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்தல், பொது கழிவறைகளை சுத்தமாக பராமரித்தல், கழிவறைகளை ரசாயன திரவங்களை கொண்டு சுத்தம் செய்வது, கழிவறைகளை ரசாயன திரவங்கள் இல்லாமல் சாம்பல் பொடி, கோலமாவு கொண்டு சுத்தம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார்பங்கேற்றனர்.