×

முட்டுவாஞ்சேரி, தூத்தூர் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

அரியலூர்,நவ.22:  அரியலூர் மாவட்டம் முட்டுவாஞ்சேரி, தூத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது முட்டுவாஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முட்டுவாஞ்சேரி, தூத்தூர் செல்லும் சாலை தற்போது பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக காணப்படுவதோடு குண்டும், குழியுமாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முட்டுவாஞ்சேரி பஸ்நிலையம் அருகே ஸ்ரீபுரந்தான்-விக்கிரமங்கலம் சாலையில் பஸ் மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புசெழியன் மற்றும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முட்டுவாஞ்சேரி- தூத்தூர் சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஸ்ரீபுரந்தான்-விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thottur ,road ,
× RELATED ஈரோடு மாநகருக்குள் ‘பீக் அவர்சில்’...