×

ஓடும் பஸ்சில் துணிகரம் மூதாட்டியிடம் 6 பவுன் பறித்தவர்களுக்கு வலை

மேச்சேரி, நவ.22: சேலம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேச்சேரி அருகே மேட்டுதானம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கமலா(60). இவர், நேற்று முன்தினம் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனியார் பஸ்சில் சென்றார். அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேச்சேரி சென்றதும் பஸ்சில் இருந்து இறங்கியபோது, கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடி மாயமாகியிருப்பதை கண்டு கமலா திடுக்கிட்டார். பஸ்சில் வந்தபோது கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தாலிக்கொடியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை போன தாலிக்கொடியின் மதிப்பு சுமார் ₹1.50 லட்சம் இருக்கும். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் சங்கிலி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சம்பவம்:

சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகராசி(27), நேற்று மதியம் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், தக்காளி விலை கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் கூறிக்கொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி, திடீரென மகராசி கழுத்தில் அணிந்திருந்த இரண்டேகால் பவுன் சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்தனர். இதனை கண்டதும், மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : pawns ,
× RELATED சோழிங்கநல்லூர் ஐடிபிஐ வங்கியில் போலி...