×

வீடு வீடாக சென்று திமுகவினர் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

குமாரபாளையம், நவ.22: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அனுப்ப, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் திமுகவினர் சேகரித்த நிவாரண பொருட்கள்  லாரி மூலம் அனுப்பப்பட்டது. கஜா  புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வழங்க  குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று நிவாரண  பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல் குமாரபாளையத்தில் நகர  செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சென்ற திமுக தொண்டர்கள் டார்ச் லைட்,  வேட்டி, சேலை, லுங்கி, துண்டு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை சேகரித்தனர்.  அதுபோல் பள்ளிபாளையத்தில், கடந்த 3 நாட்களாக நகர செயலாளர்  ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற திமுகவினர், நிவாரண பொருட்களை வாங்கி வந்து  லாரிகளில் ஏற்றிச்சென்று, மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏவிடம்  ஒப்படைத்தனர். இந்த பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு  அனுப்பிவைக்கப்பட்டது.


Tags : homeowners ,home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...