×

போதை ஆசாமி கைது

காரைக்குடி, நவ. 22: காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் (38) கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். கஜா புயலால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கூத்தன் மகன் பாண்டி (44) என்பவர் குடிபோதையில் வீரப்பனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. வீரப்பன் புகாரின்பேரில், காரைக்குடி அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Asami ,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...