×

விளாத்திகுளத்தில் பராமரிப்பின்றி சேதம் சாலை சீரமைப்பில் களமிறங்கிய மக்கள்

விளாத்திகுளம், நவ.22: விளாத்திகுளத்தில் பல மாதங்களாக சீரமைக்கப்படாத சாலையை பொதுமக்களே சீரமைத்தனர். விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சத்யாநகர் நீர்தேக்க சாலை உள்ளது. இந்த சாலையை மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. கடந்த 10 நாட்களாக விளாத்திகுளம் பகுதியில் பெய்த மழையால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் சகதி காடாக மாறியது.

இந்த சாலையை சீரமைக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சத்யாநகர் நீர்த்தேக்க சாலை தெருவில் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து பணம் திரட்டினர். பொதுமக்கள் அளித்த பணத்தின் மூலம் நேற்று காலை சத்யாநகர் நீர்தேக்க சாலை தெருவில் முன்னாள் எம்எல்ஏ என்கேபெருமாள் தலைமையில் வரதராஜபெருமாள், சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் பல்லாங்குழியாக காட்சியளித்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.

Tags : road ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...