×

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மிதந்த நர்ஸ் சடலம்

மார்த்தாண்டம், நவ. 22:  குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை நர்ஸ்  சடலமாக மீட்கப்பட்டார்.  அவர் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டாரா என்பது  குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள். குமரி மாவட்டம்  குழித்துறை பழவாறு பகுதியில் நேற்று காலை இளம்பெண் ஒருவரின் சடலம்  தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்டது. இதை பார்த்து அந்த பகுதியை  சேர்ந்தவர்கள் குழித்துறை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து இளம்பெண்ணின் சடலத்தை  மீட்டனர்.  இளம் பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். சுடிதார் அணிந்து இருந்தார். இதற்கிடையே  தகவல் அறிந்து களியக்காவிளை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  விசாரித்தனர். விசாரணையில், அவர் களியக்காவிைளயை அடுத்த மீனச்சல் பகுதியை  சேர்ந்த தரன் மகள் ஸ்ரீஜா(23) என்பதும், தனியார் மருத்துவமனையில்  நர்சாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இவரது பெரியம்மா வீடு  தேங்காபட்டணத்தில் உள்ளது.

சமீப காலமாக அங்கிருந்து நித்திரவிளையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று  முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற ஸ்ரீஜா மாலையில் வீடு திரும்ப வில்லை.  இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க  முடியவில்லை. அவர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்  செய்யப்பட்டது. இந்நிலையில் குழித்துறை பழவாறு பகுதியில் தாமிரபரணி ஆற்றில்  அவர் சடலமாக மீட்கப்பட்டார். நித்திரவிளையில் நர்ஸ் வேலை  பார்த்தவர் இங்கு எப்படி வந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் கொலை  செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது  தெரியவில்லை. இது பற்றி களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார்கள்.

Tags : Nurse ,river ,Thamiraparani ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...