×

திருவள்ளூரில் முத்தரையர் இளஞ்சிங்கப்படை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

திருவள்ளூர், நவ. 22: திருவள்ளூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில், முத்தரையர் இளஞ்சிங்கப்படை தளபதிகள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வி.பி.ரவிக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.வாசுதேவன் முன்னிலை வகித்தார். செயலாளர் கே.ஜெயராமன் வரவேற்றார். இளஞ்சிங்கப்படை நிறுவனர் இ.சுப்பிரமணியன், சென்னை சவுந்தரபாண்டியன், ஜி.சந்திரபாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றி, நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.

கூட்டத்தில், வரும் ஜனவரி 19க்குள் 1,000 உறுப்பினர்களை இளஞ்சிங்க படையில் சேர்ப்பது, கிளை சங்கங்கள் அமைப்பது, வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகிகள் பி.சசிக்குமார், ஜி.குபேரன், ஆர்.குருசாமி, ஜி.சீனிவாசன், இ.சுந்தர், ஏ.சரவணன், எஸ்.குப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Muthuariyar Pillaiyalai Managers Introductory Meeting ,Thiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்