×

தேசிய நூலக வாரவிழா

விழுப்புரம், நவ. 21: விழுப்புரம் மாவட்ட நூலகம் சார்பில் 51ம் ஆண்டு தேசிய நூலக வார விழா நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக புத்தகக் கண்காட்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலகத்தில் நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், சிஇஓ முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி,  நவ. 21: புதுவை, குருமாம்பேட், பள்ளித் தெருவில் வசித்தவர் பன்னீர்செல்வம்  (67). தொழிலாளியான இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். சில  தினங்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  பின்னர் வீடு திரும்பிய பன்னீர்செல்வத்துக்கு, தலைவலி இருந்துள்ளது. இதனால்  விரக்தியடைந்த பன்னீர்செல்வம் நேற்று வீட்டில் தூக்குபோட்டு இறந்தார்.  இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : National Library Weekly ,
× RELATED தேசிய நூலக வார விழா கரூர் நூலகத்தில் நூல்கள் கண்காட்சி