×

மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி, நவ. 21: பண்ருட்டி அருகே சிறுவத்தூர், கொக்குப்பாளையம் பகுதிகளில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது அனுமதியின்றி மணல் எடுத்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(52) என்பவரை கைது செய்து அவரது மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். மற்றொரு வண்டியின் உரிமையாளர் ஓடிவிட்டதால் வண்டியை பறிமுதல் செய்தனர்.இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED குருமாம்பேட்டில் பரபரப்பு வீடுகளில்...