×

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் புயல் மீட்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

பொன்னமராவதி,நவ.21:    பொன்னமராவதி தாலுகா அலுலகத்தில் கஜா புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை அமைச்சர் பாஸ்கரன்,  வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, சிவகங்கை எம்பி செந்தில்நாதன், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று நடத்தினர். இதில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரன் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர் வழங்கல், சுற்றுப்புற தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெறுவதை விளக்கினார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபாலன் மின் சீரைமைப்பு பணிகள் நடைபெற்றுவது குறித்தும் விளக்கி பேசினார. இதே போல வேளாண் உதவி இயக்குனர்  எட்வர்ட்சிங், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், விஏஓ பாண்டியன், ஊராட்சி செயலாளர் ராமசாமி உட்பட பலர் பேசினர். இதில் புதுக்கோட்டை ஆர்டிஓ டெய்சிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Storm Recovery Operations Laboratory ,Ponnaravarathi Taluk Office ,
× RELATED இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதிய கார்