×

விஷம் வைத்து நாட்டுக்கோழிகள் சாகடிப்பு போலீசில் புகார்

கெங்கவல்லி, நவ.21:  கெங்கவல்லியில், முன் விரோத தகராறில் நாட்டுக்கோழிகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கெங்கவல்லி பேரூராட்சி 10வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆலிஸ்(48). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது தோட்டத்தில் நாட்டுக்கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர் ஆலிஸிக்கு சொந்தமான கோழிகள், அருகே உள்ள முருகேசன் என்பவரின் தோட்டத்தில் மேய்ந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து, தனது தோட்டத்தில் முருகேசன் குருணை மருந்துகளை வைத்துள்ளார். அதனை சாப்பிட்ட ஆலிஸிக்கு சொந்தமான கோழிகள் உயிரிழந்தது குறித்து கெங்கவல்லி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags : countryside ,
× RELATED அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று...