ஊத்தங்கரை, நவ.21: மாவட்ட அளவிலான கபடி போட்டியில், வித்யாமந்திர் கல்லூரி மாணவிகள் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில், ஈஷா யோகா சார்பில், மாவட்ட அளவில் கபடி போட்டி நடந்தது. இப்போட்டியில் ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். சாதனைப் படைத்த மாணவிகளை கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன், செயலர் ராஜீ, முதல்வர் அருள் மற்றும் உடற்கல்விதுறை இயக்குனர்கள் திருமூர்த்தி, லட்சுமணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.