×

மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்

போச்சம்பள்ளி, நவ.21: கிருஷ்ணகிரி  மாவட்டம் மத்தூர் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, மத்தூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே  பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மைசூரில் உள்ள கல்குவாரியில் வேலைபார்த்து வந்தார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவிக்கும்,  சிலம்பரசனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனை மாணவியின் தாய், அண்ணன் ஆகியோர்  கண்டித்தனர். இந்நிலையில், தீபாவளியன்று செல்போன் ஒன்றை மாணவிக்கு சிலம்பரசன் வாங்கி கொடுத்துள்ளார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவி கடத்தப்பட்டதாகவும்,  சிலம்பரசன்தான் கடத்தி சென்றதாகவும் மத்தூர் போலீசில் நேற்று மாலை  மாணவியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு  செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : student kidnapping ,
× RELATED மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்