×

இளம்பெண் மாயம் கணவர் புகார்

தேவதானப்பட்டி, நவ. 20: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் திருமணமான இளம்பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் கிரிஜா(21). இவரது கணவர் சரவணக்குமார் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. சரவணன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஜெயமங்கலம் வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கணவருடன் வாழ பிடிக்கவில்லை என கிரிஜா கூறியதால் ஊர்மத்தியஸ்தர்களை வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர். இந்நிலையில் நேற்று கிரிஜாவை காணவில்லை என அவரது கணவர் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : magician ,
× RELATED கேரளாவில் 2 பெண்கள் நரபலி...