×

தமாகா 5ம் ஆண்டு துவக்க விழா மாநாடு

ஆவடி, நவ.20:  தமாகா 5ம் ஆண்டு துவக்க விழா மாநாட்டில் திருவள்ளுர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான விக்டரிமோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.எஸ்.தியாகராஜன்,  துணைத் தலைவர்கள் வேப்பம்பட்டு அன்பழகன், முத்துரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆவடி நகர தலைவர் லோகநாதன், அமீத்பாபு  வரவேற்றனர். இதில் மாநில பொதுச் செயலாளர் வி.பி.ஜவகர்பாபு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் எல்.கே.வெங்கட் ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில், டிசம்பர் 1ம் தேதி அரியலூரில் நடைபெறும் கட்சியின் 5ம் ஆண்டு துவக்க விழா மாநாட்டிற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பது, கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட நிர்வாகிகள் ஆவடி நாராயணசாமி, திருவேங்கடம், நாகராஜன், முல்லை விசுவநாதன், சோமு, விஜயலட்சுமி, இளைஞரணி நிர்வாகிகள் சோராஞ்சேரி காமராஜ், தியாகராஜன், வட்டார, நகர தலைவர்கள் கிளாம்பாக்கம் சிவகுமார், தேவராஜலு, ஜோஷி பிரேமனந்த்,  பாபு, ஏழுமலை, ராஜேந்திரன், விஜயகுமார், சிவசங்கரன், பூந்தமல்லி சிவகுமார், சுரேஷ், பழனி, யுவராஜ், பாலு, லட்சுமிபதி, மாசிலாமணி, பிரபு, வேலா, ஜான், ராதாகிருஷ்ணன் யுத்தீஸ்வரன், அருள்தாஸ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thamaka 5th Festival Conference ,
× RELATED பழவேற்காடு அரசு மருத்துவமனையில்...